உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  கோயில் ஆர்ச்சில் பெயர் அகற்ற கோரி ரோடு மறியல்

 கோயில் ஆர்ச்சில் பெயர் அகற்ற கோரி ரோடு மறியல்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் நுழைவாயிலில் ஆர்ச் உள்ளது. இதில் ஒரு சமுதாயத்தினர் பெயர் எழுதப்பட்டுள்ளது. அந்தப்பெயரினை அகற்றக்கோரி கைலாசபட்டி காலனி பகுதி மக்கள், கைலாசபட்டி பஸ்ஸ்டாப்- தேனி ரோட்டில் 10 நிமிடம் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தென்கரை இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சந்த் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் சவுந்திரபாண்டியன், ஆசிர்வாதம், வெள்ளைச்சாமி உட்பட 11 பேரை தென்கரை போலீசார் கைது செய்தனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை