திறன் மேம்பாட்டு பயிற்சி
தேனி: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹவுதியா கல்லுாரியின் கணினி ஆய்வு கூடத்தில் கணினி, இணையத் தமிழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பு நடந்தது. நிறைவு விழாவில் தேனி தமிழ்ச்சங்க தலைவர் பொன்முடி தலைமை வகித்தார்.செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் முகமது மீரான், தமிழ்த்துறை தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவி ஜெசிமா நன்றி கூறினார்.