மாணவி மாயம்
கம்பம்,:பெரியகுளம் அருகே அழகர்நாயக்கன்பட்டியை சேர்ந்த 15 வயது மாணவி ராயப்பன்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறார் . கடந்த ஜூலை 20 ல் விடுதியில் இருந்து மாயமானார். வருகைப் பட்டியலை பார்த்த போது மாணவி காணாமல் போனது தெரிந்தது. விடுதி காப்பாளர் மரியபுஷ்பம் புகாரில் ராயப்பன் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.