டூவீலர் விபத்து: வாலிபர் பலி
தேனி: கோடங்கிபட்டி அமராவதி பள்ளி தெரு கூலித்தொழிலாளி விக்னேஷ் 28. இவர் ஏப்.9ல் தீர்த்தத் தொட்டி முருகன் கோயில் அருகே டூவீலரில் சென்ற போது, நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதினார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரைஅரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.