மேலும் செய்திகள்
குறைகிறது பெரியாறு அணை நீர்மட்டம்
08-Nov-2024
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் செப்.13 ல் 132 அடியாக உயர்ந்தது. அதன்பின் தென்மேற்கு பருவமழை தீவிரமடையவில்லை. அக்டோபரில் துவங்கிய வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பெய்வதும் பின் குறைவதுமாக உள்ளது. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.கடந்த 2 நாட்களாக நீர்ப் பிடிப்பில் பெய்த மழையால் அணைக்கு 461 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 864 கன அடியாக அதிகரித்தது. பெரியாறில் 9.4 மி.மீ., தேக்கடியில் 3.2 மி.மீ., மழை பதிவானது. நீர் இருப்பு 2601 மில்லியன் கன அடியாகும். தமிழகப் பகுதிக்கு 755 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் 119.85 அடியாக உள்ளது. (மொத்த உயரம் 152 அடி) .நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மழை பெய்யவில்லை. இதனால் நீர் வரத்து குறையும் வாய்ப்புள்ளது.தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் தண்ணீர் மூலம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 68 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
08-Nov-2024