மேலும் செய்திகள்
வைகை அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
21-Sep-2025
ஆண்டிபட்டி; மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் பாசனத்திற்கு செப்., 18ல் வினாடிக்கு 1330 கன அடி வீதம் தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று முன்தினம் வினாடிக்கு 1731 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் கால்வாய் வழியாக திறக்கப்பட்ட நீரின் அளவு நேற்று மாலை 5:25 மணிக்கு வினாடிக்கு 2000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நீர் திறப்பால் பெரியாறு பாசனப்பகுதியில் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 85 ஆயிரத்து 563 ஏக்கர், திருமங்கலம் பிரதான கால்வாயில் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்கள் 19 ஆயிரத்து 439 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும்.நேற்று அணை நீர்மட்டம் 66.34 அடியாக இருந்தது. அணை மொத்த உயரம் 71 அடி. அணைக்கான நீர் வரத்து வினாடிக்கு 784 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி சேடபட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம் போல் வெளியேற்றப்படுகிறது.
21-Sep-2025