வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இத்தனை நாள் தமிழ்நாட்டு திண்ணையில் டேரா போட்டிருக்கும் ரவியாரை தமிழ் படிக்கச் தடுத்தது யார்? அவர் தமிழ் பேசுவதை தடுத்து யார்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.
ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது, எதை படிக்கவேண்டும் எதை உண்ன வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
"மற்ற மாநில மாணவர்களைப்போல விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை" - எந்தெந்த மாநிலங்களில் மூன்றாவது மொழி கற்றுத்தரப் படுகிறது என்று சொல்வாரா? வட மாநிலங்களில் ஆங்கிலமே சொல்லிக் கொடுப்பதில்லையே. அங்கே போய் இதை சொல்லியிருக்கலாம்.
ராஜஸ்தான் சுற்றுலா சென்றபோது ஒரு உயர்ந்த ஹோட்டலில் பில் கொடுத்துக்கொண்டு இருந்தார் என் சகலை. அங்கு வரவேற்பில் டிவி யில் ஹிந்தி நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. நான் சென்று வர ஏற்பாளரிடம் ஆங்கில செய்தி வைக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் எங்க ஊர் கேபிள் டிவியில் ஆங்கில சேனல்கள் கிடையாது என்றார். நான் மயக்கம் போடாத குறையாக மூட்டை கட்டிக்கொண்டு வந்து விட்டேன்.
ஐயா முன்னாள் ஆளுநர் ரவி அவர்களே " விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை " என்று வேதனை படுகிறீர்களா ? பாவம் கவலையில் இளைத்து போய்விடாதீர்கல், அவ்வளவு வேதனைப்படாமல் உங்கள் வேலைகளை கொஞ்சமாவது பாருங்கள், எத்தனையோ மோசடி பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள் கோப்புகள், உங்களிடம், பெண்டிங்க்கில் வைத்துள்ளீர்கள், கொஞ்சம் அதை கையெழுத்து போட்டு அனுப்புங்கள், இல்லையெனில் குற்றங்களுக்கு உடந்தை ஆனதற்கு சமம், நீதி தேவதையை வேதனைப்படுத்தாதீர்கள்.தான் வேதனை பட்டாலும் அடுத்தவர்களை வேதனை படுத்தாதீர்கள். அந்த பாவம் சும்மா விடாது.
அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது யாரும் ஏந்த மொழியை வேடுமாலும் படிக்கலாம் அதற்கு ஒரு தடையும் கிடையாது ங்க பிஜேபி அரசு ஹிந்தியை திண்ணிக் பலே வேலைகளை செய்து வருகிறது தமிழ் நாட்டில் அரசியில் காட்சிகள் மட்டும் அல்ல மக்களும் திணிப்பை நுமதிக்க மாட்டார்கள் இந்த செயதியில் உண்மை இல்லை கவனீர் தனது பொறுப்பை உன்னார்ந்து பேசவேண்டும் சும்மா உருட்ட கூடாது
நீங்களே ஒரு முன்னாள் IB ஆபீசர். உங்கள் வட்டாரத்தில் தமிழகத்தில் நடக்கும் போதை கலாச்சாரம் பற்றிய தகவல்கள் நிறையவே இருக்கும். அதற்கும் மேலே தீவிரவாதம், பாலியல்வன்முறைனு ஏகப்பட்ட விசயங்கள் கண்கூட நடந்துகொண்டு இருக்கும்போது, ஒரு நடவடிக்கயும் இல்ல, ஒரு குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லைனா, அப்புறம் குற்றவாளிகளுக்கு துளிர் விட்டுவிட்டதுனு சொல்றதுல என்ன நியாயம் இருக்கும்? திருட்டு கும்பல் தமிழகத்தின் வளங்களை சூறையாடுவதோடு மட்டும் இல்லாமல் மிக பெரிய சமூக கொடுமைகளை செய்துகொண்டிருக்கிறது. இதில் திருட்டு குடுமபத்தை சேர்ந்த ஆட்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், திருடர்களுக்கு எப்படி பயம் வரும்? இப்படித்தான் அர்த்தமே இல்லாமல் "திணிப்பு" குனிப்புன்னு வாய்க்கு வந்ததை தைரியமாக சொல்லி மக்களை மழுங்கடிக்க செய்வார்கள். இதற்க்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.