உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலை வெளியே கூறிய தாய், மகனை கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனை

திருநெல்வேலி:திருநெல்வேலி மானுார் அருகே கள்ளக்காதல் விவகாரத்தை மற்றவர்களிடம் தெரிவித்த தாய், மகனை வெட்டி கொலை செய்த இருவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.திருநெல்வேலி மானூர் அருகே குறிச்சிகுளத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி 45. 2010 ஜூலை 20 தன் வீட்டுக்கு பின்புறம் உள்ள படப்பில் வைக்கோல் எடுக்க சென்ற போது சிராஜுதீன் 41, என்பவர் கள்ளக்காதலியான பெண்ணுடன் உல்லாசமாக இருந்தார். இதனை கண்டு சுப்பிரமணி இருவரையும் கண்டித்து அனுப்பினார்.இச்சம்பவத்தை சுப்பிரமணி, மனைவியிடமும் உறவினர்களிடமும் தெரிவித்தார். ஆத்திரமுற்ற சிராஜுதீன் நண்பர்களுடன் சேர்ந்து சுப்பிரமணியை கொல்ல திட்டமிட்டார். 2019 ஜூலை 22ல் குறிச்சிகுளத்தில் வயலுக்கு சென்று விட்டு திரும்பிய சுப்பிரமணியையும், அவரது தாயார் கோமதியையும் 65, சிராஜுதீன், அவரது நண்பர்கள் லத்தீப், நாகூர் மீரான் மற்றும் சிராஜுதீனின் காதலி ஆகியோர் சேர்ந்து வெட்டியும் கம்பால் தாக்கியும் கொலை செய்தனர்.சிராஜூதீன் உள்ளிட்ட 4 பேர் மீதும் திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் இக்கொலை வழக்கு நடந்தது. விசாரணையின் போது லத்தீப் இறந்து விட்டார்.குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் சிராஜூதீனின் காதலியை விடுதலை செய்த நீதிபதி பத்மநாபன், குற்றம்சாட்டப்பட்ட சிராஜுதீன், நாகூர் மீரானுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்தும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 21:09

சிராஜு தண்டனையை அனுபவிக்கும்போது அவருடைய வண்டிக்கு பெட்ரோல் போடப்போவது யார் ???? எந்த வைக்கோல் போர் ல வெச்சு ????


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 05, 2024 20:15

செய்திப்படி 2010 ல நடந்த சம்பவம் .... அதை 2019 லதான் வெளியே சொல்லியிருப்பார் போலிருக்கு .... அதுக்கு கொலையா ????


Sridhar
செப் 05, 2024 07:44

கள்ள சாராயத்துக்கு 10 லட்சம் என்றால் கள்ள காதலுக்கு 5 லட்சமாவது கொடுக்கவேண்டும் இது மாதிரி கள்ள வோட்டுக்கு 1 லட்சம் என்று பட்டியல் தயார் செயதால் நல்லது


Ganesun Iyer
செப் 05, 2024 04:57

கள்ள சாரயம் குடிச்சி செத்தா ஒரு சாவுக்கு பல லட்சம். கள்ள காதலை கண்டிப்பா ஒரு சாவுக்கு தண்டனை 1000 ரூபாய்..


புதிய வீடியோ