மேலும் செய்திகள்
கூடங்குளம் அருகே இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
24-Aug-2024
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேற்கே பஞ்சல், பெருமணல் ஆகிய கடலோர கிராமங்களில், கிளாத்தி மீன்கள் லட்சக்கணக்கில் இறந்து ஒதுங்கின. இதனால், கடற்கரை முழுதும் துர்நாற்றம் வீசவே, மீனவர்கள் அச்சம் அடைந்தனர்.மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் உள்ளிட்ட கிராமங்களில் மீனவர்கள் தாங்கள் பிடித்த கிளாத்தி மீன்களுக்கு, போதிய விலை கிடைக்காததால், அவற்றை மீண்டும் கடலில் கொட்டியது தெரியவந்தது.அவையே, நீரோட்டத்தில், கூடங்குளம் கடற்கரை பகுதியில் ஒதுங்கின என்பதை அறிந்து, மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். அப்பகுதியில் கோழிப்பண்ணை நடத்துவோர், தீவனத்திற்காக இறந்த மீன்களை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
24-Aug-2024