உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி /  உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி

 உரிமையாளர் சிறைக்குச் சென்றதால் பட்டினியால் நாய்கள் பரிதாப பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்தவர் அழகேசன். ராமையன்பட்டி அருகே கம்மாளங்குளத்தில் விலை உயர்ந்த நாய்களை வளர்த்து வந்தார். இவர் பழைய வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நாய்களுக்கு 15 நாட்களாக உணவு வழங்கப்படவில்லை. இதில் சில நாய்கள் பரிதாபமாக இறந்தன. வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவலறிந்த விலங்கு நல ஆர்வலர்கள், போலீசாருடன் வீட்டிற்கு சென்று உயிருடன் இருந்த நாய்களை மீட்டனர். அங்கு ராட்வீலர், பெல்ஜியம், ஹஸ்கி, லேப்ரடார், கோல்டன் ரெட்ரீவர் உள்ளிட்ட விலை உயர்ந்த வெளிநாட்டு நாய்கள் வளர்க்கப்பட்டது தெரிய வந்தது. இதில் ஒரு பெல்ஜியம் நாயின் மதிப்பு மட்டும் ரூ.1.25 லட்சம். நாய்களை பராமரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட உரிமையாளர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

N Annamalai
ஜன 01, 2026 22:00

அவை வை பேச முடியாதவை .உரிமையாளர் அதை உணர்ந்து ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து இருக்க வேண்டும் .குறைந்தபட்சம் விலங்கு நல ஆர்வலர்களை தொடர்பு கொண்டு உதவி கேட்டு இருக்கலாம் .


Ram
ஜன 01, 2026 05:36

பாவம் , ஆனால் நாய் வளர்த்து அக்கம் பக்கத்தினருக்கு தொல்லைகொடுப்பது அதைவிட பாவம்


Krishna Kumar
டிச 31, 2025 18:19

It is his responsibility to arrange someone to take care the dogs temporarily. Its crime to leave in a caged condition domestic animals without food and water. He doesnt bother, it means he kept these animals just for commercial activities not for his passion and love towards dogs.


K.Ravi
டிச 31, 2025 09:41

பாவம் அந்த வாயில்லா ஜீவன்கள், வீட்டு ஓனர் அவைகளுக்கு முன்னேற்பாடு செய்திருக்க வேண்டும்


baala
டிச 31, 2025 09:28

அறிவுகளா அவரும் சிறையில் தானே இருக்கிறார். அவரை அரசுதானே பராமரிக்கிறது.


Mani . V
டிச 31, 2025 05:33

"........நாய்களை பராமரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட உரிமையாளர் மீது போலீசில் புகார்....." அட பைத்தியங்களா, உரிமையாளர் சிறையில் இருக்கும் பொழுது நாய்களை எப்படி பராமரிக்க முடியும்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை