காய்ச்சலுக்கு சிறுமி பலி
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய பிறகு காய்ச்சல் பரவி வருகிறது. நூற்றுக்கணக்கானவர்கள் காய்ச்சல் பாதிப்புக்கு தினமும் வட்டார மருத்துவமனை களுக்கு வருகின்றனர். கே.டி.சி.நகரைச் சேர்ந்த மூன்று வயது சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பெருமாள்புரம் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டார். காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று இறந்தார்.