குட்கா கடத்தியவர் கைது
ஆர்.கே. பேட்டை: ஆர்.கே. பேட்டையில் இருந்து சுந்தரராஜபுரம் வழியாக இருசக்கர வாகனத்தில் புகையிலை பொருட்களை கடத்தி செல்வதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட போலீசார், ஹீரோ ஹோண்டா ஆக்டிவா வாகனத்தில் வந்த ஒருவரிடம் சோதனையிட்டனர். அதில் அவர், 15 கிலோ ஹான்ஸ் பொருட்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜு, 40, என தெரியவந்தது.