உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபருக்கு சிறை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆந்திர வாலிபருக்கு சிறை

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் பேருந்து நிலைய பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்ற ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ரவிக்குமார், 48, என்பவரை, காஞ்சிபுரம் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், 2019 நவ., 3ல் கைது செய்தனர்.பின், அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். வழக்கு விசாரணை போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி.திருமகள் முன் விசாரணைக்கு வந்தது.போலீசார் சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.ஜெ.சரவணன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பால் நிரூபிக்கப்பட்டு உள்ளன. 'எனவே, அவருக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ