பூட்டிய வீட்டில் நகை திருட்டு
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை அடுத்த, கோபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா, 50; ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். நேற்று, இவர் வேலைக்கு சென்றிருந்த நிலையில், இவரது மனைவி வித்யா, வயல்வெளிக்கு சென்றிருந்தார்.மதியம் வீட்டிற்கு திரும்பிய வித்யா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டார். வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ஏழு சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.