உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

சென்னை, சேத்துப்பட்டு, ஜெகநாதபுரத்தைச் சேர்ந்தவர் தேவிகா, 40. இவர், சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வசித்தபோது, கொளத்துார் லட்சுமிபுரம், அண்ணா தெருவைச் சேர்ந்த வினோத்குமார், 32, என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் தேவிகாவிடம், நெருங்கிய நண்பர்ஒருவர் சென்னைமாநகராட்சியில் செயற்பொறியாளராக பணிபுரிகிறார். இவர் வாயிலாக, குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித்தருவதாக ஆசைகாட்டி உள்ளார். இதை நம்பிய தேவிகா, கடந்த 2023ல் இரண்டு தவணைகளாக, 2.20 லட்சம்ரூபாய் வினோத்குமாரிடம் வழங்கி உள்ளார். ஆனால், வீடும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் திரும்ப கிடைக்க வில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த தேவிகா, சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். குற்றப்பிரிவு ஆய்வாளர்தலைமையிலான போலீசார் விசாரித்து, வினோத்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை