உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் சிரமம்

நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பு புகையால் வாகன ஓட்டிகள் சிரமம்

கடம்பத்துார்: கடம்பத்துார் - மப்பேடு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கொண்டஞ்சேரி ஊராட்சி. இப்பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் உள்ளது.இதனால் நெடுஞ்சாலையோரம் சேகரமாகும் குப்பையை துப்புரவு பணியாளர்கள் அகற்றாமல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இவ்வாறு சாலையோரம் குப்பை எரிப்பதால் ஏற்படும் புகையால், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாவதோடு சில நேரங்களில் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள், நெடுஞ்சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி