உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலி

ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, வெள்ளியூர் ஊராட்சி, புது காலனியில் வசித்து வருபவர் கணபதி, 80. இவர் ஆடு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் ஆடுகளை தாமரைப்பாக்கம் பகுதியில் மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்பகுதியில் உள்ள நிழலில் நின்று கொண்டு இருந்தார்.அப்போது அவ்வழியே வந்த கார் கணபதி மீது மோதியது. கணபதி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது, அவர் இறந்து விட்டார். வெங்கல் போலீசார், உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை