உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடி துணை மின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

கும்மிடி துணை மின் நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், துணை மின் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து கும்மிடிப்பூண்டி நகர் பகுதி மற்றும் சுற்றியுள்ள, 30க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.துணை மின் நிலையத்தை ஒட்டி, நீர் ஓடை அமைந்துள்ளது. மழைக்காலங்களில் அருகில் உள்ள ஓடையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது, துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழந்து விடும். துணை மின் நிலையத்தில் சூழ்ந்த மழை வெள்ளம் வடியும் வரை, மின் வினியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுவது வழக்கம்.கடந்த ஆண்டு பெய்த கனமழையின் போது, கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டது. அதனால், மூன்று நாட்களுக்கு மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.துணை மின் நிலையத்தின் பாதுகாப்பு கருதியும், மக்கள் நலன் கருதியும், ஓடைக்கும் துணை மின் நிலையத்திற்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தும் விதமாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். வரும் மழைக்காலத்திற்குள் அதற்கு உண்டான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்