உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஊராட்சி, ஒன்றிய சாலையை மீட்டுத்தர பகுதிவாசிகள் போராட்டம்

ஊராட்சி, ஒன்றிய சாலையை மீட்டுத்தர பகுதிவாசிகள் போராட்டம்

செவ்வாப்பேட்டை:சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியில் 364 கோடி ரூபாயில் கடந்த, 2022ல் துவங்கிய திருவள்ளூர், ஐசிஎம்ஆர் அருகில் இருந்து திருநின்றவூர் வரை தேசிய நெடுஞ்சாலை பணி நடந்து வருகிறது. இதில் செவ்வாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பெரிய காலனி, சின்ன காலனி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, சிறுகடல் போன்ற 10-க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் பயன்படுத்தி வந்த இரண்டு சுடுகாடு செல்லும் ஊராட்சி மற்றும் ஒன்றிய சாலை தடை செய்யப்பட்டு பணி நடந்து வருகிறது. இதனால் இந்த இரு சுடுகாடுக்கு இறந்தவர்கள் உடலை கொண்டு செல்வதில் பகுதிவாசிகள் சிரமப்பட்டு வருகின்றனர் இந்த சாலையை பயன்படுத்தி செவ்வாப்பேட்டை ஊராட்சி மற்றும் சிறுகடல், பொஜன்கண்டிகை மற்றும் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் பகுதிவாசிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதியில் ஊராட்சி, ஒன்றிய சாலையை மீட்டுத்தர வேண்டும் அல்லது மாற்று சாலை அமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் டெய்சிராணிஅன்பு தலைமையில் கிராமவாசிகள் சாலை பணி நடைபெறும் பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செவ்வாப்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அ.டெய்சிராணி அன்பு பூந்தமல்லி தி.மு.க, - எம்.எல்.ஏ., கிருஷ்ணசாமி மற்றும் கலெக்டருக்கு சாலை வசதி கேட்டு கோரிக்கை மனு அளித்துள்ளார் ஊராட்சி, ஒன்றிய சாலை ஏற்படுத்தி சுடுகாடு செல்லும் சாலையையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இல்லையேல் வரும காலங்களில் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் மறியல்

வண்ண மீன் வளர்ப்பு பண்ணைக்காக, ஆழ்துளை குழாய் கிணறு அமைப்பதை எதிர்த்து, பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் செய்தனர்.சென்னை மாதவரம் மண்டலம், புழல் அண்ணா நினைவு நகரில், 'அக்வா ஜூ' என்ற பெயரில், வண்ண மீன் வளர்ப்பு பண்ணை உள்ளது. அந்த பண்ணையின் தண்ணீர் தேவைக்காக, நேற்று முன்தினம் இரவு, ஆழ்துளை குழாய் கிணறு அமைக்கும் பணி துவங்கியது. தகவல் அறிந்த பொதுமக்கள், அந்த மீன் பண்ணை முன் திரண்டு, குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.'மீன் பண்ணைக்கு, ஏற்கனவே நான்கு ஆழ்துளை குழாய் கிணறுகள் உள்ளன. அதனால், சுற்றுவட்டாரத்தில், நிலத்தடி நீர் மட்டம் மிகவும் குறைந்து விட்டது. இந்த நிலையில், மேலும் ஒரு குழாய் அமைத்தால், குடிநீருக்காக அலைய நேரிடும். அதனால், ஆழ்துளை குழாய் அமைக்க கூடாது' என்றனர்.பண்ணையாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிருப்தி அடைந்த மக்கள், கதிர்வேடு சாலை சந்திப்பில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்த புழல் போலீசார், அங்கு சென்று பேச்சு நடத்தினர். பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கை பெறும்படி, போலீசார் அறிவுறுத்தினர்.அதன்பின் மறியலை கைவிட்ட மக்கள், புழல் போலீசார், மாதவரம் வருவாய்த் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம், நேற்று காலை புகார் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை