திருத்தணியில் போக்குவரத்து நெரிசல்
திருத்தணி: நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி மற்றும் விடுமுறை தினமான நேற்று திருத்தணியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மேலும், முகூர்த்த தினமாக அமைந்திருந்ததால், ஏராளமான புதுமண தம்பதியினர், திருத்தணி மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். சித்துார் சாலை முதல் அரக்கோணம் சாலை வரை வாகனங்கள் நெரிசலில் சிக்கி திணறின. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். போலீசாரும் குறைந்த எண்ணிக்கையிலேயே பணியில் ஈடுபட்டிருந்தனர்.