உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 150 மாநகர பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கம்

150 மாநகர பேருந்துகள் இன்று கூடுதலாக இயக்கம்

சென்னை:சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், 150 பேருந்துகள், இன்று கூடுதலாக இயக்கப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.இது குறித்து, மாநகர போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - கோடம்பாக்கம் ரயில் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடக்கின்றன.அதனால், இத்தடத்தில் செல்லும் மின்சார ரயில்கள், இன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:30 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணியர் நலன் கருதி தாம்பரம், கிண்டி, தியாகராய நகர், சென்ட்ரல் மற்றும் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில், வழக்கமாக இயங்கும் மாநகர பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.மேலும், முக்கிய பேருந்து நிலையங்களில் அதிகாரிகளை நியமித்து, பேருந்துகள் இயக்கம் கண்காணிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ