தேசிய கிக் பாக்சிங் 1,500 பேர் பங்கேற்பு
சென்னை :சென்னையில் நேற்று துவங்கிய, தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், நாடு முழுதும் இருந்து, 1,500 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். வாக்கோ இந்தியா ஆதரவில், தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், தேசிய கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, நேரு விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கின. இதில், 7 - 15 வயதுக்கு உட்பட சிறுவர்கள் மற்றும் 'கேடட்' பிரிவுகளுக்கு மட்டுமே போட்டிகள் நடக்கின்றன. தமிழகம், டில்லி, கேரளா உட்பட நாடு முழுதும் இருந்து, 1,500 சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் எடை சரிபார்ப்பு நடந்தது. தொடர்ந்து, நேற்று காலை போட்டிகள் துவங்கின.