உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் மூழ்கி 6ம் வகுப்பு மாணவர் பலி

ஏரியில் மூழ்கி 6ம் வகுப்பு மாணவர் பலி

ஆவடி:ஆவடி அடுத்த பாலவேடு, சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார், 46; கூலித்தொழிலாளி. இவரது இளைய மகன் ராகுல், 11; பாலவேடு அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று முன்தினம் பள்ளி விடுமுறை என்பதால், நண்பர்கள் நான்கு பேருடன் பாலவேடு ஏரியில் குளிக்க சென்றார். அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற ராகுல், நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள், பயத்தில் யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு சென்றனர். பின், இரவு 8:30 மணியளவில், ராகுல் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார், கரையில் இருந்து 20 அடி துாரத்தில் மிதந்து கொண்டிருந்த ராகுல் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி