உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம் பாப்பரம்பாக்கத்தில் அவதி

திருவள்ளூர்:சென்னை - பெங்களூரு அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பாப்பரம்பாக்கம் ஊராட்சி.இப்பகுதியைச் சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பூந்தமல்லி சென்று வருகின்றனர். பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் பகுதிவாசிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் மாணவ,மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை