உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தீயில் கருகி முதியவர் பலி

தீயில் கருகி முதியவர் பலி

திருத்தணி:உத்திரபிரதேசம் மாநிலம் முஸ்தாபாத் நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார், 69. இவர் கடந்த இரு மாதங்களாக திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் தங்கியிருந்து, செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார். கடந்த, 4ம் தேதி மாலை செங்கல் சூளைக்கு தினேஷ்குமார் தீ வைக்கும் போது, பலத்த தீக்காயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி