உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு

கனகவல்லிபுரம் துணை மின்நிலைய பணி எப்போது? துறை அமைச்சர் உறுதியால் மக்கள் எதிர்பார்ப்பு

திருவள்ளூர், திருவள்ளூர் அருகே கனகவல்லிபுரம் கிராமத்தில், இடம் கிடைத்தும், துணை மின் நிலையம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை கூட்டத்தில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் தெரிவித்துள்ளதால் நம்பிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் வசிப்போருக்கு, தற்போது அரக்கோணம் அடுத்த மோசூரில் இருந்து மின்சாரம் பெறப்பட்டு, விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக, திருவள்ளூர் - மணவாளநகர், காக்களூர், திருத்தணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் துணை மின்நிலையங்கள் அமைத்து, விநியோகிக்கப்பட்டு வருகிறது.மோசூரில் பழுது ஏற்பட்டால், திருவள்ளூர் மாவட்டமே இருளில் மூழ்கிவிடும். தற்போது கும்மிடிப்பூண்டி, காக்களூர், பொன்னேரி, மப்பேடு உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.மின் தேவையும் அதிகரித்து உள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கூடுதல் மின்நிலையங்கள் அமைத்தால் தான் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதையடுத்து, 2011 - 12ம் ஆண்டு திருவள்ளூர் அடுத்த பூண்டி ஒன்றியம் கனகவல்லிபுரம் கிராமத்தில், 230 கி.வாட் துணை மின் நிலையம் அமைக்க உத்தரவிடப்பட்டது.இதற்காக, மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில், 14.88 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த இடத்திற்கு, 3.24 கோடி ரூபாய் செலுத்த இருப்பதாக மின்வாரியம் அறிவித்திருந்தது.இந்த நிலையில், சென்னை மின்வாரிய தலைமையகம், கனகவல்லிபுரத்தில் திட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனால், 50க்கும் மேற்பட்ட கிராமவாசிள் அதிர்ச்சியடைந்தனர்.கடந்த 2023ம் ஆண்டு நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கனகவல்லிபுரம் கிராமத்தில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்த நிலையில், தற்போது வரை பணி துவங்கவில்லை.சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், கனகவல்லிபுரம் மற்றும் திருவாலங்காடு ஆகிய இரண்டு துணை மின் நிலையங்கள் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக, அமைச்சர் தெரிவித்தார். இதனால், திருவள்ளூர் மாவட்ட மக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

விவசாயிகளுக்கு

தனி வழித்தடம்திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, திருமழிசை ஆகிய மூன்று கோட்ட பொறியாளர் அலுவலகங்கள் உள்ளன. இங்கு, 50,000க்கும் மேற்பட்ட விவசாய இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. வீடுகள், விவசாயம், தொழிற்சாலை உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும், ஒரே தடத்தில் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், விவசாயத்திற்கு தனி வழித்தடம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் மகிழச்சியடைந்து உள்ளனர்.

பஞ்செட்டியில் ரூ.250 கோடியில்

புதிய துணைமின் நிலையம்திருவள்ளூர் மாவட்டம் பஞ்செட்டியில், 256.45 கோடி ரூபாய் செலவில், 230/110 கிலோ வோல்ட் திறனில் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள், 2023 ஜூலையில் துவங்கி, தற்போது கட்டுப்பாட்டு அறை பணி, 95 சதவீதமும், துணை மின் நிலைய கட்டுமான பணி, 75 சதவீதமும் முடிவடைந்துள்ளன.பஞ்செட்டி துணைமின் நிலைய கட்டுமான பணிகளை, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, வரும் ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின்நிலையத்தில் உள்ள 230 கி.வோ., துணை மின் நிலையம் மற்றும் கும்மிடிப்பூண்டி 230 கி.வோ., துணை மின் நிலையத்திலிருந்து, பஞ்செட்டி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் எடுத்து வரப்படும்.அங்கிருந்து, 110 கி.வோ., திறன் உடைய கும்மிடிப்பூண்டி சிப்காட், தேர்வாய்கண்டிகை, சோத்துபெரும்பேடு, பஞ்செட்டி, பொன்னேரி, மேலுார், அலமாதி மற்றும் பெரியபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு கூடுதல் மின்சாரம் எடுத்து வரப்பட்டு, அவற்றின் வழியாக பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை