ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளி மருத்துவமனையில் அட்மிட்
பூந்தமல்லி:பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி, பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ள செல்வராஜ், 50, என்பவருக்கு, நேற்று முன்தினம் இரவு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது சிறுநீரகத்தில் கல் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் உள்ள குற்றவாளிகள் வார்டில் செல்வராஜ் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.