மாற்றுத்திறனாளிகள் நலனிற்கு சேவை புரிந்தோருக்கு விருது
திருவள்ளூர்:மாற்றுத்திறனாளிகள் நலனிற்கு சேவை புரிந்தோருக்கு விருது வழங்கப்படுகிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தோர் மற்றும் நிறுவனங்களுக்கு, டிச.3ல் தமிழக முதல்வர் விருது வழங்க உள்ளார். இதற்காக, தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்தோர் தங்களது விண்ணப்பித்தை https://awards.tn.gov.inஎன்ற இணையதளத்தில் வரும் 28க்குள் விண்ணப்பிக்கவும். விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.