உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு

கலை நிகழ்ச்சி வாயிலாக திருத்தணியில் விழிப்புணர்வு

திருத்தணி, திருத்தணி நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பணி, மட்கும் குப்பை, மட்காத குப்பை, பிளாஸ்டிக், புகையிலை விற்பனைக்கு தடை, டெங்கு காய்ச்சல், மீண்டும் மஞ்சப்பை, மழைநீர் சேகரிப்பு, சொத்து வரி செலுத்துதல் தொடர்பான மக்கள் இடையே விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில், சிவசக்தி கிராமிய கலைக் குழுவின் சார்பில், திருத்தணி பேருந்து நிலையம், கமலா திரையரங்கு, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, காந்தி நகர் திரவுபதியம்மன் கோவில் மற்றும் அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில், கலை நிகழ்ச்சிகள் வாயிலாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.முன்னதாக, கலை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் சரஸ்வதி, கமிஷனர் பாலசுப்ரமணியம், துப்புரவு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கலை நிகழ்ச்சியில், குப்பையை பிரித்து கொடுப்பது, அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், குட்கா பொருட்களை பயன்படுவது தவிர்த்தல் போன்றவை குறித்து, விழிப்புணர்வு நாடக கலைஞர்கள் நடித்து காண்பித்தனர்.இந்த மாதம் முழுதும் மேற்கண்டவை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி