மேலும் செய்திகள்
ஆற்றில் மிதந்த சடலம் மீட்பு
02-Oct-2025
ஊத்துக்கோட்டை: ஒடிஷா மாநில வாலிபர் , ஆரணி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். பெரியபாளையம் ஆரணி ஆற்றில், ஆண் சடலம் மிதப்பதாக பெரியபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தேர்வாய் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன், நேற்று ஆரணி ஆற்றில் மிதந்த சடலத்தை, போலீசார் மீட்டனர். அவரின் சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை பார்த்ததில், அவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த சுமன்லாமா, 35, என்பது தெரிந்தது. சடலத்தை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
02-Oct-2025