உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்

கூடப்பாக்கம்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது, கூடப்பாக்கம் கிராமம். இங்கிருந்து, திருவள்ளூருக்கு பணி நிமித்தமாக பகுதிவாசிகள் மற்றும் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர் என, தினமும் 500க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர்.இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடை இல்லாததால், பகுதிவாசிகள் மழையிலும், வெயிலிலும் அவதிப்பட்டு வருகின்றனர்.பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நெடுஞ்சாலையோரம் பயணியர் நிழற்குடை அமைக்க வேண்டுமென நேமம் பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ