உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கேட்பாரின்றி உள்ள மின்கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

கேட்பாரின்றி உள்ள மின்கம்பம் பயன்பாட்டிற்கு வருமா?

பாண்டூர், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பட்டரைபெரும்புதுார் அடுத்து அமைந்துள்ளது நாராயணபுரம் கிராமம். இங்கு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் அனாமத்தாக போடப்பட்டுள்ளன.பட்டரைபெரும்புதுார், மஞ்சாகுப்பம், புதுார், எல்லப்பநாயுடுபேட்டை, ராமஞ்சேரி உள்ளிட்ட பல கிராமங்களில் மின்கம்பங்கள் சேதமடைந்து எலும்புக்கூடாக காட்சியளிக்கின்றன.அதற்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட மின்கம்பங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றாமல் விடப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் சேதமடைந்த மின்கம்பங்கள் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் மாற்று மின்கம்பங்கள், கேட்பாரற்று சாலையோரம் போடப்பட்டுள்ளது. இவற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்