உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  காக்களூர் ஏரி மேம்பாட்டு பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

 காக்களூர் ஏரி மேம்பாட்டு பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

காக்களூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம், 2.27 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணியினை, விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டார். திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், காக்களூர் ஏரி மற்றும் தாமரைக்குளம் ஆகிய இரண்டும், 2.27 கோடி ரூபாய் மதிப்பில், 'நமக்கு நாமே திட்டம்' திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து, காக்களூர் ஊராட்சி மற்றும் திருவள்ளூர் நகராட்சி எல்லையில் அமைந்துள்ள 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரி மற்றும் தாம ரைக்குளத்தினை, 2.27 கோடியில், மேம்படுத்தி நடைபாதை, மின் விளக்குகள், நடைபயிற்சியாளர் அமர இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி துவக்க விழா, ஊரக வளர்ச்சி துறை சார்பில், கடந்த ஜூலை 4ம் தேதி, துவங்கியது. நடைபாதை மற்றும் தடுப்பு அமைக்கும் பணியினை, கலெக்டர் பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின், அப்பணியை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு, ஊரக வளர்ச்சி துறையினருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி