உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் மதுபாட்டில் பறிமுதல்

கும்மிடியில் மதுபாட்டில் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி, எல்லையம்மன் நகரில், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் பத்மாவதி, தலைமையில் போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அங்குள்ள வீடு ஒன்றில், மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.அங்கிருந்த, ஐந்து மதுபாட்டில்களை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக, அதே பகுதியைச் சேர்ந்த ரேகா, 34, என்பவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி