மேலும் செய்திகள்
கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பியவர் போலீசில் புகார்
3 minutes ago
வருவாய் மாவட்ட கால்பந்து அம்பத்துார் அரசு பள்ளி வெற்றி
3 minutes ago
பொன்னேரி: பஞ்செட்டி - நெடுவரம்பாக்கம் சாலையில், தரைப்பாலம் சேதமடைந்து, இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். பொன்னேரி அடுத்த பஞ்செட்டி - நெடுவரம்பாக்கம் சாலையில், மழைநீர் செல்வதற்காகன பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் மேற்பகுதி கட்டுமானத்தில் கான்கிரீட் பூச்சுகள் சிதறி, ஜல்லிக் கற்கள் பெயர்ந்துள்ளன. மேலும், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் வெளியில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், தரைப்பாலம் பலவீனமடையும் நிலை உள்ளது. மேலும், இப்பாலத்தின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். இரவு நேரங்களில், இரும்பு கம்பிகளில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாலம் முழுமையாக பலவீனமடைந்து வீணாகும் முன், உரிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 minutes ago
3 minutes ago