உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை

சேதமடைந்த ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது தொடுகாடு ஊராட்சி. இப்பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதுார் - திருவள்ளூர் நெடுஞ்சாலை வழியே தினமும் 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த நெடுஞ்சாலையில், தொடுகாடு பகுதியிலிருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் நெடுஞ்சாலை பல இடங்களில் சேதமடைந்து கற்கள் பெயர்ந்து மோசமான நிலையில் உள்ளது.இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருவதோடு போக்குவரத்து நெரிசலிலும சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக காலை, மாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ - மாணவியர் நெரிசலில் சிக்கி கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.அவசர மருத்துவ தேவைக்கு இவ்வழியாக ஆம்புலன்ஸ் செல்வதில் கூட கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கற்கள் பெயர்ந்த நிலையில் உள்ள நெடுஞ்சாலையை சீமைக்க வேண்டும் என, பகுதியினர் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ