உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூரில் வரும் 27ல் விவசாயிகள் நலன் கூட்டம்

திருவள்ளூர்:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம், வரும் 27ம் தேதி நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 27ம் தேதி, காலை 10:00 மணியளவில் நடக்கிறது.கூட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல், கால்நடை பராமரிப்பு, மீன்வளம், கூட்டுறவு, மின்வாரியம், வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் வேளாண் சார்ந்த துறை அலுவலர்கள் பங்கேற்க உள்ளனர்.எனவே, திருவள்ளுர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ