உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண் மீது தாக்குதல் தந்தை, மகனுக்கு வலை

பெண் மீது தாக்குதல் தந்தை, மகனுக்கு வலை

அருங்குளம்:பெண்ணை தாக்கிய தந்தை மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். திருவாலங்காடு ஒன்றியம், அருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரலட்சுமி, 40. இவர், நேற்று முன்தினம் வீட்டருகே பால் கறந்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த மனோகரன், 54, அவரது மகன் அஜித்குமார், 34, ஆகியோர், முன்விரோதம் காரணமாக வரலட்சுமியை உருட்டு கட்டையால் தாக்கினர். இதில், வரலட்சுமி படுகாயம் அடைந்தார். இதுகுறித்து, வரலட்சுமி அளித்த புகாரின்படி, கனகம்மாசத்திரம் போலீசார் மனோகரன், அஜித்குமார் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை