உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியால் அச்சம்

சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியால் அச்சம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் அத்திப்பட்டு ஊராட்சியில், ஒருங்கிணைந்த பள்ளி வளாகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 30 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, நான்கு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இதன் நான்கு துாண்களின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, தொட்டியின் அடிபாகம் சேதமடைந்துள்ளது.பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியின் வெளிப்புறத்தில் இருந்து, அவ்வப்போது கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதால், பள்ளி குழந்தைகள் விபத்தில் சிக்கி காயமடைய வாய்ப்புள்ளது.எனவே, ஆபத்தான நிலையில் பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்ற, ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !