உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆதிதிராவிட இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

ஆதிதிராவிட இளைஞர்களுக்கு போர்க் லிப்ட் ஆப்பரேட்டர் பயிற்சி

திருவள்ளூர்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, தாட்கோ வாயிலாக 'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி வழங்கப்பட உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், தாட்கோ சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு 'போர்க் லிப்ட் ஆப்பரேட்டர்' பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் பணியாற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம், மூன்று லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 - 35 வரை இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சி முடிவில், சான்றிதழ் வழங்கப்படும். வேலைவாய்ப்பிற்கும் வழிவகை செய்யப்படும். இப்பயிற்சியை பெற www.tahdco.comஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி