மேலும் செய்திகள்
குறைதீர் கூட்டம் 505 மனுக்கள் ஏற்பு
27-May-2025
திருவள்ளூர், திருவள்ளூரில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில், மக்களிடமிருந்து 533 மனு பெறப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிலம் சம்பந்தமாக 86, சமூக பாதுகாப்பு திட்டம் 98, வேலைவாய்ப்பு வேண்டி 76, பசுமை வீடு, அடிப்படை வசதி கோரி 45 மற்றும் இதர துறை 228 என, மொத்தம் 533 மனுக்கள் பெறப்பட்டன.இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவியை வழங்க, துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
27-May-2025