உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

திருத்தணி : ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடி வழியாக தமிழகத்திற்கு குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, திருத்தணி போலீசார் நேற்று பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது திருப்பதியில் இருந்து, காஞ்சிபுரம் நோக்கி வந்த ஆந்திர மாநில பேருந்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.அப்போது, 15 கிலோ குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும் குட்கா பொருட்களை கடத்தி வந்த சென்னை பார்க்டவுனைச் சேர்ந்த ரமேஷ்குமார், 43, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை