உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குட்கா கடத்தியவர் கைது

குட்கா கடத்தியவர் கைது

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே ஸ்கூட்டரில் குட்கா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே உள்ள ரோஷாநகரம் சந்திப்பில், போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலம் சத்தியவேடில் இருந்து மாதர்பாக்கம் நோக்கி, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் சென்றவரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, 10 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அதை கடத்திய மாதர்பாக்கத்தைச் சேர்ந்த பாபு, 64, என்பவரை கைது செய்தனர். வழக்கு பதிந்த பாதிரிவேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி