உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு

அரசு மருத்துவ கல்லுாரியில் சான்றிதழ் படிப்புக்கு அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காலியாக உள்ள சான்றிதழ் படிப்பிற்கு, விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரியில், 2025- - 26ம் ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அனஸ்தீஷியா, ஆபரேஷன் தியேட்டர், டயாலிஸ், ஆர்த்தோபீடிக் டெக்னீஷியன் மற்றும் பன்முக மருத்துவ பணி ஆகிய பிரிவுகளில், 64 இடம் காலியாக உள்ளன. அப்பிரிவுகளுக்கு, மருத்துவக் கல்லுாரியில், வரும் 8 - 12ம் தேதி வரை இலவசமாக விண்ணப்பத்தை பெற்று கொள்ளலாம். பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை தேர்ச்சி பெற்ற, 17 வயதிற்கு மேற்பட்டோர், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 17ம் தேதிக்குள், கல்லுாரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு, gmail.com என்ற 'இ - மெயில்' மற்றும் 044 - 2766 5029 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை