உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனுமன் கோவிலில் கும்பாபிஷேகம்

அனுமன் கோவிலில் கும்பாபிஷேகம்

ஆர்.கே.பேட்டை: அனுமன் கோவில் கும்பாபிஷேகம், நேற்று காலை விமரிசையாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆர்.கே.பேட்டை பஜார் வீதியில் பழமையான அனுமன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று காலை 9:00 மணிக்கு நடந்தது. இதற்கான யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் துவங்கியது. தொடர்ந்து, மூன்று கால பூஜைகள் நடந்து வந்தன. நேற்று காலை நான்காம் கால பூஜையை தொடர்ந்து, காலை 9:00 மணிக்கு யாகசாலையில் இருந்து புனிதநீர் கலசங்கள், கோவில் கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மாலை 6:00 மணிக்கு சிறப்பு பாராயணம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை