உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

திருமழிசை:திருமழிசை அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது. திருமழிசை பேரூராட்சியில் அம்மை மரகதாம்பிகை சமேத புண்ணிய கோட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 26ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியும், 8:00 மணிக்கு சதாசிவ வழிபாடும் நடந்தது. கும்பாபிஷேக நாளான நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி பூஜையும், காலை 10:10 மணிக்கு விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும் நடந்தது.மதியம் 12:30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையும், மாலை 6:00 மணிக்கு அம்மையப்பர் - மரகதாம்பிக்கு திருக்கல்யாணமும், இரவு வீதியுலாவும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ