உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கீழ்மணம்பேடு கோவிலில் 26ல் மகா கும்பாபிஷேகம்

கீழ்மணம்பேடு கோவிலில் 26ல் மகா கும்பாபிஷேகம்

கீழ்மணம்பேடு:திருமழிசை அடுத்த, கீழ்மணம்பேடு பகுதியில் அமைந்துள்ளது ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில். இந்த கோவிலில் மஹா கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி காலை 9:00 மணி முதல், 10:30 மணிக்குள் நடைபெறும்.முன்னதாக, நாளை, காலை 4:30 மணிக்கு புண்யாகவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கி தொடர்ந்து, வாஸ்து ஹோமமும், அங்குரார்பணமும், வேதபிரபந்த சாற்றுமுறை தொடக்கமும் நடைபெறும். பின், யாக குண்டங்களில் அக்னி பிரதிஷ்டையும் நடைபெறும்.பின், மறுநாள், காலை 4:30 மணியளவில் கும்ப ஆராதனமும் முதல்கால யாகசாலை பூஜையும், தீபாராதனையும் நடைபெறும். மதியம் 2:30 மணியளவில் நவகலச ஸ்பதன திருமஞ்சனமும், விமான கலச பூஜைகளும் நடைபெறும்.மஹா கும்பாபிஷேக நாளான 26ம் தேதி, காலை 9:00 மணியளவில் கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகமும், ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும், சாற்றுமுறையும் தீபாராதனையும் நடைபெறும். மதியம் 3:00 மணிக்கு திருக்கல்யாண வைபவமும் நடைபெறும்.வரும் 27ம் தேதி முதல், மண்டல பூஜை நடைபெறும் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை