மேலும் செய்திகள்
குட்கா கடத்தியவர் சிக்கினார்
11-Jan-2025
ஊத்துக்கோட்டை:தமிழக - ஆந்திர எல்லையான ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியே வந்தவரை போலீசார் சோதனை செய்தனர்.அவர், ஆந்திர மாநிலம், மிட்டபாளையம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ், 29, என்பதும், அவரிடம் இருந்து, 150 பாக்கெட் ஹான்ஸ் பாக்கெட் இருந்தது தெரிந்தது.இதன் எடை மூன்று கிலோ. இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து, நாகராஜை கைது செய்தனர்.
11-Jan-2025