மெய்யூர் அரசு பள்ளி சென்டம் கேக் வெட்டி கொண்டாட்டம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வெளியானது. அதில், 26 அரசுப் பள்ளிகள் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றன. அவற்றில் ஒன்றான, பூண்டி ஒன்றியம், மெய்யூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், இந்த ஆண்டு 25 மாணவர், 27 மாணவியர் என மொத்தம், 52 பேர் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் 'கேக்' வெட்டி கொண்டாடினர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை அனைவரும் பாராட்டினர்.