உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

மாட்டுத்தொழுவமாக மாறிய சாலை சிரமத்தில் வாகன ஓட்டிகள்

திருமழிசை:சென்னை, மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ., நீளச் சாலை, 2014-ம் ஆண்டு ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகின்றன.இதில், திருமழிசை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் இணைப்பு சாலை மாட்டு தொழுவமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் சாலையில் தேங்கியுள்ள மாட்டுச்சாணத்தால் ஏற்படும் துர்நாற்றத்தால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் இணைப்பு சாலையை பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருவதோடு, மழை நேரத்தில் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை